
நீ என்னுடன் பேசாத
இந்த நாட்களில்
பதிவு செய்யப்பட்ட
உன் குரலைக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
இப்போது
அதற்கும்
வழி இல்லாமல்
போய்விட்டது.
என் அலைபேசியோ வீட்டில்.
நானோ விடுதியில்.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment