
ஒவ்வொரு முறையும்
உன் வெட்கம் மட்டுமே
வெட்கமில்லாமல்
எட்டிப் பார்க்கிறது.
நீயோ
அதன் பின்னால்
ஒளிந்து கொள்கிறாய்.
பேரழகி என்று உன்னை
நான் சொன்னதையெல்லாம்
உன் வெட்கம்
பொய்யாக்கி விடுமோ என்று
பயமாய் இருக்கிறது-ஏனெனில்
உன்னைவிட உன் வெட்கம்தான்
அழகாய் இருக்கிறது.
No comments:
Post a Comment