Monday, September 20, 2010

தாலி இல்லா திருமணம்.
வீடு இல்லா குடித்தனம்.
தாம்பத்யம் இல்லா மணவாழ்க்கை.
அவளுடன் இரு வருடம்.
-இந்த அலைபேசியில்.

இன்று
நீதிமன்றம் இல்லா 
விவாகரத்து.
-அதே தொலைபேசியில்.


______________________________

ஆண்டின் மொத்த நாட்களின்
எண்ணிக்கையை விட 
அதிகமாய் இருக்கிறது.
என் நாட்குறிப்பேட்டில் 
இடம்பெறும் 
-உன் பெயர்களின் எண்ணிக்கை.

______________________________________


மருத்துவமனை   
கட்டிலில் - நீ
அருகில் - நான்
நிற்கிறேன் பார்த்துக்கொண்டே .
முகம்  நீலம்
மூக்கில்  குழாய்
முகத்தில்  வீக்கம்
உடலில்  களைப்பு
 - ஏனடி என்னை  அழ  வைத்தாய் ?

___________________________________

உன்னை   ஞாபகப்படுத்தும் 
கண்ணில்  படக்கூடிய
பொருட்களை  எல்லாம்
உன்னிடமே   கொடுத்து  விட்டேன்
கண்ணிற்குள்  உள்ள
உன்னை  மட்டும்
கொடுக்க  தெரியவில்லை 

________________________________________
திருப்பி தர
இனி  என்னிடம்
எதுவும்  இல்லை
இதயத்திலுள்ள
உன்னைத் தவிர.

_______________________________________

சிறிது  காலம்
மறக்க சொன்னபோதே
என்னால்  முடியவில்லை
இப்போது
நிரந்தரமாக
மறக்க  சொல்லியிருக்கிறாய்
அதையும்  பார்போம் !

_______________________________________

இவைகளை  எல்லாம்
குப்பையில்  போட்டாலும்  சரி
தீயிட்டு  எரித்தாலும்  சரி
அழிபவை அந்த  பொருட்கள் மட்டும்  தான் .
என்னில்  உள்ள  உன்  நினைவுகள்  அல்ல.


___________________________________________


அதே  குரல்
அதே  "சாப்டாச்சா?"
அதே  "I love U"
அதே  "டியர்"
அதே  "டார்லிங்"
அதே  முத்தம்
அதே  அக்கறை
அதே முகம்
அதே  stupid சசி
-இரண்டு  வருடங்களாக .

சலித்து விட்டதா  ?
"விட்டுவிடு" என்கிறாய் !!!.

________________________________________


மீன்கள்  நீரை  விட்டு 
காற்றுக்கு  வந்தால்
இறந்து  விடும் .
மனிதன்  காற்றை விட்டு  
நீருக்கு  சென்றால்  இறந்து  விடுவான் .
அதுபோலத்தான்  நானும் .
உன்  இதயத்திலிருந்து  வெளிவந்தால்
இறந்து  விடுவேன் .
இப்படி  சொல்லாமல்  கொள்ளாமல்  
வெளியேற  சொன்னால்
எங்கு  போவது ? 
உள்ளேயே  வைத்து  கொள் (ல் ).
என்  உயிர்  உன்  கைகளில் .
இல்லை  இல்லை
உன்  இதயத்தில் .


______________________________________________


ஒரே  இரவில் 
அத்துணை இரவுகளின் 
உறக்கங்களையும்
பறித்துக் கொண்டாய் 
ஒரு   10 நிமிட  உறக்கம்  
கடன்  கொடு  இன்று .
கனவிலாவது  உன்னை
கண்டு  கொள்கிறேன் .


_________________________________________


இறந்த    பின்பு 
சொர்க்கம்  செல்வேனா?
நரகம்  செல்வேனா ?
என்ற  கேள்வி  
எல்லோர்  மனத்திலும்  உண்டு .
நானோ  தெள்ள தெளிவாய் 
அறிந்திருக்கிறேன் .
நரகம் தான் செல்வேன்.
எப்படியா?
இப்போது     உன்  நினைவுகளில்
வாழ்கிறேன் .
சொர்கத்திலிருந்து  சொர்க்கத்திற்கே    
மீண்டும்  செல்ல 
முடியாது  அல்லவா ?


_________________________________________________

பார்க்காமல்   வந்த  காதல்
பார்க்காமல்  வளர்ந்த  காதல்
பார்த்த  பின்பும்  தொடர்ந்த  காதல்
இன்று  என்னை  'பார்' வெறுக்க  வைத்தது .


__________________________________________________


என்னிடம்  கொண்ட  
உன்  அதே  வெட்கம் 
இன்று  வேறொருவனிடம் .
-சற்று  தரம்  குறைந்து .


___________________________________________________


உண்மை  பைத்தியத்திற்கு  கூட 
கிடைக்காத  ஒன்று  
எனக்கு  கிடைகிறது 
உன்   மேல்
நான்  கொண்ட  பைத்தியத்தால்.
'அக்மார்க்'  பைத்திய  முத்திரை .


__________________________________________________-

காதலில்  தோற்றுப்  போனவர்களும்
ஏமாற்றப்பட்டவர்களும்   தான்
நன்கு  கவி  எழுதுவார்கள்  என  நம்புகிறேன்
எனக்கே  கவிதை  வருகிறதே!

_____________________________________________________


என்  இதயத்தை
ஒவ்வொரு  முறை
காயப்படுத்தும்  போதும்
பார்த்து  நடந்து  கொள்கிறாய்
பட்ட  காயத்தில் படக்  கூடாது  என்று .
காயத்தின்  மேல்  எல்லாம்  கருணை கொள்கிறாய் . 
என்  மேல்  கொண்டால்  என்ன ?


______________________________________________________

அப்பா
அண்ணா
வகுப்பு  ஆசிரியர்
பள்ளி  முதல்வர்
பாட  ஆசிரியர்
விரிவுரையாளர்
தோழன்
தோழி
மூன்றாம்  மனிதன்
இவர்களில்  யாரிடம்
அர்ச்சனை
வாங்கிய  போதும்
உரைக்கவில்லை .
எந்த  ஆற்றலையும்
வீண்  செய்யாத  உன்  மௌனம்
என்னைச்  சாகடிக்கிறது.


______________________________________________


 மாலை 4.30 க்கு  உன்னைச்   சந்திக்க  வேண்டும் .
என்னை  ஆயத்தம்  செய்கிறேன்.
12 மணியிலிருந்து .
2 மணிக்கு  பேருந்தில் . . .
2.45 லிருந்து  3.45 வரை  பேருந்து  நிலையத்தில் . . .
3.45 லிருந்து  4.10 வரை  மீண்டும்  பேருந்தில் . . .
4.10 லிருந்து    4.35 வரை   பேருந்து  நிறுத்தத்தில் .
. . .
கல்லூரி  பேருந்து  வருகிறது .
நிற்கிறது .
நீயும்  இறங்குகிறாய் .
தோழிகளுடன்   பேசி  
முத்துக்களை 
உதிர்த்து  கொண்டே  வருகிறாய் .
மண்ணிற்கு  வலிக்காமல்
நடக்கிறாய்  தேரென .
இதே  காட்சி
பல  நாட்கள்  நிகழ்கிறது
சுரிதாரில் 
சில  நாட்களும்
புடவையில்  
மிகச்  சில  நாட்களும்
பார்க்கிறேன்  உன்னை.
எனக்காக ஓரிரு  வினாடிகள்
உன்  பூ இதழ்களை அசைத்துப்
பேசிய  நாட்களில்
பயணித்த  களைப்பும் , 
காத்திருந்த  களைப்பும் 
காற்றோடு போனது . . .
பேசாத  நாட்களில்
முழு  ஆயுளும்   
வீணாய்  போனது .
கள்ளி  ஏனடி  என்னை  காக்க வைத்தாய்?


___________________________________________________


3 comments:

  1. really ur poems are vry touching da... i love it. i lik de first poem vry much da... evryone can undrstnd ur feel. dnt wry man, come out of it n njoy de life 2 de core

    ReplyDelete