
பேசிக் கொள்ளாமல் இருப்பதால்
எனக்கு மட்டும்தான்
இத்தனை வலியா?
இல்லை.
உனக்கும்தான்.
எனக்காகத்தான்
இல்லை இல்லை
நமக்காகத்தான்
தாங்கிக்கொள்கிறாய்
எனும்போது
இன்னமும் என் காதல்
கூடுகிறது.
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment