Saturday, May 15, 2010


பேசிக் கொள்ளாமல் இருப்பதால்
எனக்கு மட்டும்தான்
இத்தனை வலியா?
இல்லை.
உனக்கும்தான்.
எனக்காகத்தான்
இல்லை இல்லை
நமக்காகத்தான்
தாங்கிக்கொள்கிறாய்
எனும்போது
இன்னமும் என் காதல்
கூடுகிறது.

No comments:

Post a Comment